ஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களில் இருவருக்கு தண்டனை
நவ.22, 2010. ஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட
விரைவு நீதி மன்றம், இருவருக்கு தண்டனை வழங்கி 31 பேருக்கு விடுதலை வழங்கியுள்ளது.
2008ம்
ஆண்டு கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டு இருவரின்
உயிரிழப்பிற்கு காரணமான 6000 பேர் கொண்ட குழுவில் தற்போது இருவருக்கு மட்டும் ஆறு ஆண்டுகள்
சிறைத்தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பு குறித்து தங்கள்
கருத்துக்களை வெளியிட்ட அப்பகுதியின் கிறிஸ்தவ அதிகாரிகள், இத்தகைய எளிமையான தண்டனைகள்,
குற்றவாளிகள் மேலும் துணிவுடன் குற்றமிழைக்கவும், பாதிக்கப்பட்டோர் மேலும் மனத்தளர்ச்சி
அடையவுமே உதவும் என தங்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.