பொறுப்பான முறையில் தேர்தலில் கலந்து கொள்ள ஹெயிட்டி நாட்டின் ஆயர்கள் மக்களுக்கு விடுத்துள்ள
வேண்டுகோள்
நவ.18, 2010. நாட்டின் எதிர்காலத்தை மனதில் வைத்து, பொறுப்பான முறையில் தேர்தலில் கலந்து
கொண்டு உங்கள் குரல் கேட்கும்படி வாக்குகளைப் பதிவு செய்யுங்கள் என்று இம்மாதம் 28ம்
தேதி நடக்கவிருக்கும் தேர்தலையொட்டி ஹெயிட்டி நாட்டின் ஆயர்கள் மக்களுக்கு வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.
ஜனவரியில் ஹெயிட்டி நாடு சந்தித்த நில நடுக்கம், பின்னர் ஏற்பட்ட
புயல், வெள்ளம், காலரா நோய் என்ற பல அழிவுகளால் தங்கள் நாடு மிகவும் சீர்குலைந்துள்ளதென்பதைச்
சுட்டிக் காட்டியுள்ள ஆயர்கள், மீண்டும் இந்நாடு உறுதியான நிலையை அடைய இந்தத் தேர்தலில்
கலந்து கொல்வது மக்களின் கடமை என்பதை வலியுறுத்தியுள்ளனர்.
தேர்தலில் போட்டியிடும்
19 வேட்பாளர்களுக்கும் அந்நாட்டின் ஆயர்கள் அனுப்பியுள்ள செய்தியில், நாட்டின் பொது நலனை
மனதில் கொண்டு அவர்கள் பணி புரிய வேண்டுமென்று கூறியுள்ளனர்.