சாலைமைய வாழ்க்கை வாழும் மக்களுக்கானத் திருச்சபையின் பணி
நவ.18,2010. அருள்தந்தை நித்ய சகாயம், FABC என்ற ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் மனித
மேம்பாட்டு அலுவலகத்தின் செயலர். அண்மையில் தாய்லாந்து நாட்டு பாங்காக்கில் சாலையில்
வாழும் மக்களுக்கானத் திருச்சபையின் பணி பற்றிய கருத்தரங்கு ஒன்று நடந்தது. அக்கருத்தரங்கை
FABCயின் மனித மேம்பாட்டு அலுவலகமும் திருப்பீட குடியேற்றதாரர் அவையும் இணைந்து நடத்தின.
சாலையை மையமாக வைத்து வாழும் மக்களுக்குத் திருச்சபை ஆற்றி வரும் பணிகள் குறித்து அருள்தந்தை
நித்யா அவர்களிடம் தொலைபேசி வழியாகக் கேட்டோம்.