2010-11-18 15:19:37

Canterbury பேராயர் Rowan Williams திருத்தந்தையைச் சந்தித்தார்


நவ.18, 2010. கிறிஸ்தவ ஒருமைப்பாட்டிற்கானத் திருப்பீட அவையின் 50ம் ஆண்டு கொண்டாடட்டங்களில் கலந்து கொள்ள இப்புதனன்று உரோமைக்கு வந்திருந்த Canterbury பேராயர் Rowan Williams, இவ்வியாழனன்று திருத்தந்தையைச் சந்தித்து உரையாடினார்.

பேராயர் Williams ஒவ்வொரு முறையும் உரோமைக்கு வரும்போது, திருத்தந்தையைச் சந்திப்பது வழக்கம் என்றும், இம்முறை அவர் சந்திப்பதில் எவ்வித தனிப்பட்ட காரணங்களும் இல்லை என்றும் Canterbury பேராயரின் அலுவலகம் அறிவித்துள்ளது.

இம்மாதத்தில் ஐந்து Anglican ஆயர்கள் கத்தோலிக்கத் திருச்சபையில் சேர்வதாகக் அறிவித்துள்ளதற்குப் பின் திருத்தந்தையும், Canterbury பேராயரும் சந்திப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.