2010-11-17 15:02:59

சூடான் பொது மக்கள் கருத்து வாக்கெடுப்புக்காகச் செபிக்குமாறு உலகக் கிறிஸ்தவ சபைகளின் அவைகள் அழைப்பு


நவ.17, 2010. சூடானில் வருகிற ஜனவரியில் நடைபெறவிருக்கும் பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்புக்காகச் செபிக்குமாறு WCC மற்றும் WEA உலகக் கிறிஸ்தவ சபைகளின் அவைகள் கேட்டுள்ளன.
தென்சூடான் மக்கள், சூடான் நாட்டோடு இணைந்து இருக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது குறித்து 2011ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பு, சுதந்திரமாகவும் நியாயமாகவும் குறிக்கப்பட்ட தேதியிலும் நடக்குமாறு இவ்வவைகள் கேட்டுள்ளன.
2005ம் ஆண்டு சூடானில் ஏற்பட்ட அமைதி உடன்பாட்டின்படி இவ்வாக்கெடுப்பு நடைபெறவிருக்கின்றது. WCC என்ற உலகக் கிறிஸ்தவர்கள் சபைகள் மன்றத்தில் 349 சுமார் கிறிஸ்தவச் சபைகளின் 55 கோடி கிறிஸ்தவர்கள் உள்ளனர். WEA என்ற உலக இவாஞ்சலிக்கல் கூட்டமைப்பில் 129 கிறிஸ்தவச் சபைகளின் சுமார் 60 கோடிக் கிறிஸ்தவர்கள் உள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.