2010-11-13 14:07:53

ஆஸ்திரேலியாவில் அகதிகளுக்கு உரிமைகள் வழங்க அனுமதிக்கும் நீதிமன்றத் தீர்ப்புக்கு ஆயர்கள் வரவேற்பு


நவ.13,2010 : ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் தேடுவோரின் உரிமைகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வழிவகுக்கும் நீதிமன்றத் தீர்ப்பை அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் வரவேற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் சட்டரீதியான பாதுகாப்பு விதிகள் அகதிகளுக்கும் அளிக்கப்பட வேண்டுமென்று அந்நாட்டு நீதிமன்றத் தீர்ப்புக் குறித்துக் கருத்து தெரிவித்த ஆயர் ஜோசப் கிரெஷ், அரசு இதனை உடனடியாகச் செயல்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.

உலக அளவில் அடைக்கலம் தேடுவோரின் எண்ணிக்கை ஒரே சீராக இருக்கின்ற போதிலும், ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் தேடுவோரின் எண்ணிக்கை 2009ல் 30 விழுக்காடு அதிகரித்ததாக கடந்த மார்ச்சில் வெளியான ஐ.நா. அறிக்கை கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.