2010-11-12 15:09:46

மலேசியாவில் சீன விவிலிய மாநாடு


நவ.12,2010. 15 ஆசியா மற்றும் பிற நாடுகளிலிருந்து 120க்கும் அதிகமான சைன மொழி பேசும் விவிலிய அறிஞர்கள் மலேசியாவின் கோலாலம்பூரில் விவிலிய மாநாட்டை நடத்தி வருகின்றனர்.

மலேசியாவில் முதன்முறையாக இறைவார்த்தை குறித்த இம்மாநாட்டை நடத்தி வரும் “ஒன்றிணைந்த சீனக் கத்தோலிக்க விவிலிய கழகத்தின்” உறுப்பினர்கள் கத்தோலிக்கத் திருச்சபையின், குறிப்பாக, சீனாவில் கத்தோலிக்கத் திருச்சபையின் சவால்கள் குறித்து விவாதித்து வருகின்றனர்.

வருகிற திங்களன்று நிறைவடையும் இந்த ஐந்து நாள் மாநாட்டில் 28 பேர் சீனாவிலிருந்தும் 20 பேர் தாய்வானிலிருந்தும் கலந்து கொள்கின்றனர்.







All the contents on this site are copyrighted ©.