புதிய நற்செய்திப் பணிக்கு ஊக்கம் அளிப்பது திருநற்கருணை மாநாடுகளின் முக்கிய பணி
- திருத்தந்தை
நவ.11,2010. புதிய நற்செய்திப் பணிக்கு ஊக்கம் அளிப்பது திருநற்கருணை மாநாடுகளின் முக்கிய
பணியாக இருக்கின்றது என்று திருத்தந்தை கூறினார். சர்வதேச திருநற்கருணை மாநாடுகளுக்கானத்
திருப்பீட குழுவின் நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட எண்பது பிரதிநிதிகளை இவ்வியாழனன்று
திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை இவ்வாறு கூறினார். அடுத்த சர்வதேச திருநற்கருணை
மாநாடு 2012ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நடைபெறுவதையும், அம்மாநாடு
“திருநற்கருணை – கிறிஸ்துவோடும் நம்க்குள்ளும் ஒன்றிப்பு” என்ற தலைப்பில் இடம் பெறவிருப்பதையும்
குறிப்பிட்டார் திருத்தந்தை.இந்த டப்ளின் மாநாடு, இந்த திருநற்கருணை மாநாட்டின் பொன்விழாவாகவும்
அமையும் என்ற திருத்தந்தை, திருநற்கருணை அனைத்துவிதமான பக்திகளுக்கும் மையமாக விளங்குகின்றது
என்றும் தெரிவித்தார்.