நவ.11,2010. இந்தியாவின் நாசிக் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, இதுவரை Amravati ஆயரும்
நாசிக் அப்போஸ்தலிக்க நிர்வாகியுமாக பணியாற்றிய ஆயர் லூர்ட்ஸ் டானியேல் Lourdes Daniel
என்பவரை இவ்வியாழனன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். நாசிக் மறைமாவட்ட
புதிய ஆயராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆயர் டானியேல் 1947ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி
மஹராஷ்டிர மாநிலத்தின் தேஹூவில் பிறந்தார். 1980ம் ஆண்டு குருவான இவர் 2007ம் ஆண்டு ஆகஸ்ட்
2ம் தேதி அம்ராவதி ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். பூனே மறைமாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு
1987ம் ஆண்டு மே 15ம் தேதி உருவாக்கப்பட்ட நாசிக் மறைமாவட்டத்தில் 86 ஆயிரத்துக்கு மேற்பட்ட
கத்தோலிக்கர் உள்ளனர்.