வாழ்வில் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும், பார்ப்பதில் எல்லாம் நல்லதையேப்
பார்க்க வேண்டும் என்ற சிந்தனைகளை வலியுறுத்தச் சொல்லப்படும் துணுக்குக் கதைகளில் இதுவும்
ஒன்று. மலையுச்சியிலிருந்து விழுந்து கொண்டிருந்த ஒரு மனிதர், பாதி வழியில் தனக்குள்ளேயே
சிரித்துக் கொண்டு, "நான் இன்னும் அடிபடவில்லையே." என்று தன் நிலையை வியந்து கொண்டாராம்.வாழ்வில்
அடிபடும் நாம், அங்கேயே அமர்ந்து, உடலில் பட்ட காயத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தால்,
நம்மைப் பின்தொடர்ந்து வரும் எதிர்காலம் நம்மீது ஏறி, நம்மை மிதித்துச் சென்றுவிடும்.
நமது காயங்கள் அதிகமாகும்.