2010-11-08 15:34:28

ஐந்து ஆங்கிலிக்கன் ஆயர்கள் கத்தோலிக்கத் திருச்சபையில் இணைய உள்ளனர்


நவ 08, 2010. இங்கிலாந்தின் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த 5 ஆயர்கள் கத்தோலிக்கத் திருச்சபையில் இணைய உள்ளதாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபை ஆயர்கள் Andrew Burnham, Keith Newton, John Broadhurst, Edwin Barnes மற்றும் David Silk இணைந்து கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4ந்தேதி கத்தோலிக்கத் திருச்சபையால் வெளியிடப்பட்ட Anglicanorum coetibus என்ற அப்போஸ்தலிக்க சாசனத்திற்கு இயைந்த வகையில் திருச்சபையில் இணைவதாக அறிவித்துள்ளனர்.

இவ்வாண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதியுடன் ஆங்கிலிக்கன் திருச்சபையில் தங்கள் பணிகளை நிறைவுச் செய்து அதன் பின் முழுமையாக கத்தோலிக்கத் திருச்சபையில் இணைவதாக ஆங்கிலிக்கன் ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.

இந்த ஐந்து ஆயர்களும் கத்தோலிக்கத் திருச்சபையில் இணைய உள்ளதை திருப்பீடப்பேச்சாளர் இயேசு சபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தியும் உறுதிச் செய்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.