திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஸ்பெயின் நாட்டின் இரு நகரங்களுக்கு முதன் முறையாக திருப்பயணம்
மேற்கொள்கிறார்
நவ.04,2010. வருகிற சனிக்கிழமையும் ஞாயிறன்றும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஸ்பெயின்
நாட்டின் Santiago de Compostela, Barcelona ஆகிய இரு நகரங்களுக்கு முதன் முறையாகத் திருப்பயணம்
மேற்கொள்கிறார். Santiago de Compostelaவிற்குப் பிற திருப்பயணிகளுடன் தானும் சேர்ந்து
செல்வதற்கும், Barcelonaவில் Antonio Gaudi என்ற புகழ்பெற்ற கலைவடிவமைப்பாளரால் உருவாக்கப்பட்ட
திருக்குடும்பப் பேராலயத்தைப் பார்ப்பதற்கும் பல ஆண்டுகளாய் தான் விழைந்து வந்தது நிறைவேறவுள்ளதென
திருத்தந்தை கூறினார். Barcelonaவில் திருக்குடும்பப் பேராலயத்தைத் திறந்து வைத்து
அதனை ஒரு பசிலிக்காவென அறிவித்தபின், ‘கடவுளின் குழந்தை’ என்று பொருள்படும் Nino Dios
என்ற குழந்தைகள் பராமரிப்பு அமைப்பு நிறுவவுள்ள ஒரு மையத்திற்கு அடிக்கல் நாட்டுவார்
என்று செய்திகள் கூறுகின்றன.இக்குழந்தைகள் மையம் Down Syndrome என்ற குறையுள்ள குழந்தைகள்
உள்ளிட்ட, பல மாற்றுத் திறனுடையக் குழந்தைகளைப் பராமரிக்கும் என்று இஸ்பானிய ஆயர் பேரவையின்
சார்பில் திருத்தந்தையின் திருப்பயணம் குறித்தத் தகவல் மையத்தின் இயக்குனர் Isidro Catela
கூறினார்.