2010-11-03 15:39:42

உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களும், வத்திக்கானும் தாக்குதல்களுக்கு உள்ளாகலாம் - அல்கெய்தாவின் எச்சரிக்கை


நவ.03,2010. உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களும், வத்திக்கானும் தாக்குதல்களுக்கு உள்ளாகலாம் என்று பாக்தாத் சிரியரீதி கத்தோலிக்கக் கோவிலில் தாக்குதலை மேற்கொண்ட அல் கெய்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் இணைய தளத்தில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
எகிப்தில் உள்ள இரு காப்டிக் ரீதி குருக்களின் மனைவியர் இஸ்லாமைத் தழுவியதால், அவர்கள் எகிப்தில் ஒரு மடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அல்கெய்தா அமைப்பினர் தவறான செய்திகளை விடுத்துள்ளனர். இவ்விருவரும் இஸ்லாமைத் தழுவவில்லை என்று எகிப்திலுள்ள இஸ்லாமிய அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், அல்கெய்தா அமைப்பினர் பாக்தாத் கோவிலைத் தாக்கியதையும் இஸ்லாமிய அமைப்புக்கள் வன்மையாகக் கண்டித்துள்ளன.இந்நிலையில், அல்கெய்தாவைச் சேர்ந்தவர்கள் இன்னும் தங்கள் நிலையிலிருந்து மாறாமல், மேலும் ஒரு எச்சரிக்கையை இச்செவ்வாயன்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.