கியூப திருச்சபையின் முயற்சியின் பேரில் மேலும் மூன்று அரசியல் கைதிகள் விடுதலை.
நவ 02, 2010. கியூபாவின் கம்யூனிச அரசு மேலும் மூன்று அரசியல் கைதிகளை விடுவிக்க இசைவு
அளித்துள்ளதாக அறிவித்துள்ளனர் அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள்.
திருச்சபையின் முயற்சிகளின்
பேரில் தற்போது விடுவிக்கப்பட உள்ள மூவருள், முப்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துவரும்
ஏட்ரியான் அல்வாரஸும் அடங்குவார்.
ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் தலத்திருச்சபையுடனான
பேச்சுவார்த்தைகளில் 52 அரசியல் கைதிகளை விடுவிப்பதாக அறிவித்திருந்த அரசு, தற்போது மேலும்
மூன்று அரசியல் கைதிகளை விடுவிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே விடுவிப்பதாக
அறிவித்திருந்த 52 பேரில் 13 பேர் இஸ்பெயின் நாட்டில் குடியேற மறுத்ததைத் தொடர்ந்து,
39 பேரையே விடுவித்த அரசு, இது தவிர, தற்போது புதிதாக 11 பேரை விடுவிக்கவும் இசைவு அளித்துள்ளது.