2010-11-02 15:38:53

உலகில் இன ரீதியாக மிகவும் பாகுபாட்டுடன் நடத்தப்படுவது குடியேற்றதாரர்களே


நவ 02, 2010. ஐரோப்பா, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் உலகின் வேறு சில பகுதிகளிலும் குடியேறும் மக்கள் இன ரீதியாக பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார் ஐ.நா. நிறுவனத்தின் அதிகாரி ஒருவர்.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஆய்வாளர் சித்து முய்காய் உரைக்கையில், பல்வேறு வழிகளில் குடியேற்றதாரர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படும் நிலை தொடர்வதாக உரைத்ததுடன், அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரிசோனா மாநில குடியேற்றதாரர் குறித்தச் சட்டம் சர்வதேச மனித உரிமை விதிகளுக்கு எதிராகச் செல்வதாகவும் குற்றஞ்சாட்டினார்.

உலகில் இன ரீதியாக மிகவும் பாகுபாட்டுடன் நடத்தப்படுவது குடியேற்றதாரர்களே என தன் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளதாகவும் கூறினார் முய்காய்.








All the contents on this site are copyrighted ©.