2010-11-01 15:08:56

நவம்பர் 1. நாளும் ஒரு நல்லெண்ணம்.


இத்திங்கள் அனைத்துப் புனிதர்களின் விழா.



"கத்தோலிக்க மரபின்படி புனிதர்களுக்குக் காட்டும் வணக்கம் வெறும் மரியாதை மட்டுமன்று. அல்லது வேளா வேளைகளில் எழுப்பும் சிறு சிறு மன்றாட்டு மட்டுமன்று. ஆழ்ந்த அடிப்படையிலமைந்த ஞான உறவாகும். அவர்கள் நமக்குத் தந்துள்ள விலைமதிக்கப்பெறாத முன்மாதிரிகையும், பாடமும் நமக்கு மகிழ்ச்சியூட்டும், ஊக்குவிக்கும் உதவிகளாகும்" என்று திருத்தந்தை 23ம் ஜான் கூறிச்சென்றுள்ளார்.

புனிதர்களின் பரிந்துரையை நாம் மேலான முறையில் விரும்ப வேண்டும். ஏனெனில் நாம் நமது மன்றாட்டினால் பெறமுடியாத நன்மைகளை அவர்களின் மன்றாட்டின் பயனாகப் பெறலாம். என்றவர் புனித பெர்னார்து.

நாம் ஒவ்வொருவரும் புனிதராக வாழ வேண்டும் என்பதே நமக்கு இறைவன் விடுத்துள்ள அழைப்பு. இந்த அழைப்புக்கு ஏற்றவாறு வாழ்ந்திட, அவரே சிறப்பான அருளை நம்மீது பொழிந்திட வேண்டும் என இறைஞ்சுவோம்.








All the contents on this site are copyrighted ©.