2010-10-30 16:22:19

கருக்கலைத்தலுக்கு ஆதரவளிக்கும் அரசியல் வேட்பாளருக்கும் வாக்களிப்பது ஒருநாளும் ஒழுக்க ரீதியாக நியாயப்படுத்தப்பட முடியாதது - திருப்பீட அதிகாரி


அக்.30, 2010. சட்டரீதியான கருக்கலைத்தலுக்கு ஆதரவளிக்கும் எந்த ஓர் அரசியல் வேட்பாளருக்கும் வாக்களிப்பது ஒருநாளும் ஒழுக்க ரீதியாக நியாயப்படுத்தப்பட முடியாதது என்று அறிவித்துள்ளார் திருப்பீட அதிகாரி ஒருவர்.

விசுவாசம் மற்றும் குடும்பத்திற்கான அமெரிக்க ஐக்கிய நாட்டு நடவடிக்கைக் குழுவிற்குத் தன் கருத்துக்களை வழங்கிய வேளையில், திருத்தந்தையால் அண்மையில் கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள பேராயர் Raymond Burke, கருவறையிலேயே ஒரு மனித உயிரைக் கொல்வது என்பது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது என்றார்.

திருப்பீட உயர் வழக்காடு மன்றத்தின் தலைவராக இருக்கும் இவர், அரசியல் பொது வாழ்வில் கத்தோலிக்க விசுவாசத்திற்கு எதிராகச் செயல்படும் விசுவாசிகளும் தங்கள் செயலை ஒருநாளும் நியாயப்படுத்த முடியாது என்றார்.








All the contents on this site are copyrighted ©.