1863 - சுவிட்சர்லாந்தில் கூடிய 16 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்
அமைக்கத் தீர்மானித்தனர். 1886 - அன்றைய பிரித்தானிய இந்திய அரசுக்கும், திருவாங்கூர்
மன்னருக்கும் இடையே முல்லைப் பெரியாறு ஒப்பந்தம் கையெழுத்தானது. 1961 - ஐக்கிய அரபுக்
குடியரசில் இருந்து சிரியா வெளியேறியது. 1964 - தங்கனிக்கா மற்றும் சன்சிபார் இரண்டும்
இணைந்து டான்சானியா என்ற குடியரசானது. 1964 - 565 காரட் (113 கிராம்) "ஸ்டார் ஆஃப்
இந்தியா" உட்படப் பல மதிப்புமிக்க வைரங்கள் நியூயார்க் நகரில் உள்ள அமெரிக்க அருங்காட்சியகத்தில்
இருந்து திருடப்பட்டன. 1967 – கானடாவின் மொண்ட்ரியால் நகரில் 50 மில்லியன் மக்கள்
கண்டு களித்த எக்ஸ்போ 67 உலகக் கண்காட்சி முடிவடைந்தது. 1999 - ஒரிஸாவில் இடம்பெற்ற
பெரும் சூறாவளியினால் 10,000 பேர் வரை இறந்தனர். 25 இலட்சம் மக்கள் வீடுகளை இழந்தனர்.
2005 - டில்லியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 60 பேர் வரை கொல்லப்பட்டனர்.