அண்மையில் மின்னஞ்சலில் வந்த ஒரு சில கூற்றுகள் இவை. இவற்றை யார் சொன்னது என்பது தெரியவில்லை.
ஆனால், இவ்வெண்ணங்கள் அழகானவை. எனவே பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
நீ
அணிய வேண்டிய மிகச் சிறந்த அணிகலன்... உன் புன்னகை. நீ சுமப்பதிலேயே பெரும் சுமை...
உள் மனக் காயங்கள். உன் நாவு கூரியதொரு கத்தி. பல சமயங்களில் அது உன் கழுத்தையே அறுத்து
விடும். எச்சரிக்கை. உனக்குத் தரப்பட்டுள்ள பலவற்றை நீ மறுசுழற்சி செய்யலாம்... உன்
காலத்தைத் தவிர. உன் எண்ணம் 'பாரச்சூட்' போன்றது. திறக்கும்போதுதான் அது பயன் படும். உன்
கனவுகள் நனவாக, நீ தூக்கத்திலிருந்து விழித்தெழ வேண்டும்.