2010-10-23 15:57:48

ஆங் சான் சு கி யின் விடுதலைக்கு மீண்டும் முயற்சி


அக்.23,2010. மியான்மாரில் பல ஆண்டுகளாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஜனநாயகத் தலைவி ஆங் சான் சு கி யின் கைதுக்கு எதிராக அவரின் வழக்கறிஞர்களின் கடைசி விண்ணப்பத்தைக் கேட்பதற்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் இசைவு தெரிவித்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

மியான்மாரில் வருகிற நவம்பரில் பொதுத் தேர்தல் நடைபெறவிருப்பதை முன்னிட்டு சு கி யின் விடுதலைக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளனர் வழக்கறிஞர்கள்.

ஆங் சான் சு கி யின் தண்டனை காலம் வருகிற நவம்பர் 13ம் தேதியோடு முடிவடைகின்றது.







All the contents on this site are copyrighted ©.