அக்.22,2010: மலேரியா நோய் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு உடனடியாகச் சிகிச்சை
வழங்கப்பட்டால் அது எளிதில் குணமாக்கக்கூடியதே எனவும் இந்தியாவில் மலேரியாவினால் பலியாகுவோரின்
எண்ணிக்கை மிக குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
‘
த லான்செட்’ மருத்துவப் பத்திரிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக நலவாழ்வு நிறுவனம்
கணக்கிட்டுள்ளதைவிட 13 மடங்கு அதிகமான மலேரியா நோய் இறப்புகள் இடம் பெறுகின்றன என்று
கூறப்பட்டுள்ளது.
மலேரியாவால் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் இரண்டு இலட்சத்துக்கு
அதிகமானோர் இறக்கின்றனர் என்றுரைக்கும் அந்தப் பத்திரிகை, உலகெங்கும் இடம் பெறும் மலேரியா
இறப்புகள் எண்ணிக்கைக் குறித்தக் கேள்வியையும் எழுப்பியுள்ளது.
மலேரியாவினால்
பலியானவர்களில் 90 விழுக்காட்டினர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில்
86 விழுக்காட்டினர் மருத்துவக் கவனிப்பு இல்லாமல் வீட்டிலேயே பலியாகிவிட்டதாகவும் அதில்
கூறப்பட்டுள்ளது.
ஆனால் ‘த லான்செட்’ வெளியிட்டுள்ள எண்ணிக்கையை மறுதலித்துள்ள
உலக சுகாதார அமைப்பு இந்த எண்ணிக்கை வீடு வீடாகச் சென்று எடுக்கப்பட்டது எனவும் கூறியுள்ளது.