2010-10-22 15:58:09

பிரேசில் ஆயர்கள் – மனித வாழ்வைப் பாதுகாக்கும் வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்க அழைப்பு


அக்.22,2010: தாயின் கர்ப்பத்திலிருந்து இயற்கையான மரணம் அடையும் வரை மனித வாழ்வையும் குடும்பத்தையும் பாதுகாப்பதற்கு உழைக்கும் வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்குமாறு பிரேசில் நாட்டு ரியோ தெ ஜெனியெரோ ஆயர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இம்மாதம் 31ம் தேதி அரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவிருப்பதை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள ரியோ ஆயர்கள், திருச்சபைக்குத் தனிக்கட்சி இல்லையெனினும் அதன் உறுப்பினர்கள் திருச்சபையின் அறநெறிக் கோட்பாடுகளை மதிப்பவர்களுக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்







All the contents on this site are copyrighted ©.