2010-10-20 15:31:04

வட கொரியாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தென் கொரிய கத்தோலிக்கக் குழுவினர் உதவி


அக்.20,2010. ‘கொரிய அமைதி 3000’ என்ற பெயரைக் கொண்ட ஒரு கத்தோலிக்கக் குழுவினர் வட கொரியாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான பொருட்கள் அடங்கிய வாகனங்களுடன் இப்புதனன்று தென் கொரியாவிலிருந்து வட கொரியா சென்றடைந்தனர்.
இரு குருக்கள் அடங்கிய இக்குழுவினர் வட கொரிய வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 2500 குடும்பங்களுக்குத் தேவையானப் பொருட்களைக் கொண்டு சென்றனர்.
வட கொரிய உரோமைய கத்தோலிக்கக் குழுவின் ஒத்துழைப்போடு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதெனவும் இவ்வுதவிகளால் குழந்தைகளும் வயது முதிர்ந்தவர்களும் பெரிதும் பயனடைவர் என்றும் ‘கொரிய அமைதி 3000’த்தின் இயக்குனர் Andrew Kim Do-hyung கூறினார்.இக்குழுவினரின் இச்செயல்பாடு இரு கொரிய நாடுகளுக்குமிடையே அமைதியையும், ஒப்புரவையும் வலுப்படுத்த எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள ஒரு சிறிய முயற்சி என்று Andrew Kim மேலும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.