2010-10-20 15:29:13

குருமாணவர்களுக்குத் திருத்தந்தை எழுதியுள்ள கடிதத்திற்கு இந்தியாவிலுள்ள இந்து அறிஞர்கள் பாராட்டு


அக்.20,2010. குருமாணவர்களுக்குத் திருத்தந்தை எழுதியுள்ள கடிதத்தில், அவர்கள் பிற சமயங்களைக் குறித்து கற்றுக் கொள்ள அவர் விடுத்துள்ள அழைப்பை இந்தியாவிலுள்ள இந்து அறிஞர்கள் பாராட்டியுள்ளனர்.
திருத்தந்தையின் இந்த செய்தி மதங்களுக்கிடையே உள்ள புரிந்து கொள்ளுதலையும், உறவையும் வலுப்படுத்த உதவும் ஒரு முயற்சி என்று இந்திய சமூகச் சீரமைப்பளரான சுவாமி அக்னிவேஷ் கூறினார்.
ஒவ்வொரு மனிதரும் பிற மதங்களைக் குறித்து அடிப்படையாக அறிந்து கொள்வது மிக்க நன்மை பயக்கும் என்று பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த கருணா சுக்லா கூறினார்.
திருத்தந்தையின் இந்தச் செய்தி மதங்களுக்கிடையே உள்ள பல தவறான எண்ணங்களைப் போக்குவதற்கு ஒரு சிறந்த வழி என்று அனுபவம் மிக்க பத்திரிக்கையாளர் அர்ஜுன் நிரலா கூறினார்.இந்திய கத்தோலிக்க ஆயர்களின் சார்பில் தன் கருத்தை வெளியிட்ட அருள்தந்தை பாபு ஜோசப், திருத்தந்தையின் கடிதம் மதங்களுக்கிடையே நல்லுணர்வையும், உரையாடலையும் வலுப்படுத்தும் என்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.