2010-10-20 15:31:26

உலகில் புகையிலைப் பயன்படுத்துவோரில் இந்தியா இரணடாம் இடம்


அக்.20,2010. உலக அளவில் புகையிலையைப் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது என மத்திய குடும்பலநலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் புகையிலை உற்பத்தியில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது எனவும் உலகளவில் புகையிலையைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஆண்டுதோறும் இறப்பவர்களின் எண்ணிக்கை 55 இலட்சமெனவும் அவர் தெரிவித்தார்.இதில் இந்தியர்களின் எண்ணிக்கை 0.9 விழுக்காடு என்றும், காசநோய், எய்ட்ஸ், மலேரியா போன்ற நோய்களைக் காட்டிலும் புகைப்பிடிப்பதால் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து காணப்படுகிறது என்றும் ஆண்டுதோறும் எட்டு இலட்சம் முதல் பத்து இலட்சம் மக்கள் இந்தப் பொருளை பயன்படுத்துவதன் மூலம் இறப்பை தேடிக்கொள்கின்றனர் என்றும் அவ்வமைச்சர் அறிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.