மால்ட்டாவில் மணமுறிவை சட்டம் மூலம் அங்கீகரிக்கும் முயற்சிகளுக்கு அந்நாட்டு ஆயர்கள்
எதிர்ப்பு
அக். 19, 2010. மால்ட்டாவில் மணமுறிவை சட்டம் மூலம் அங்கீகரிப்பது குறித்து அரசு சிந்தித்து
வரும் வேளையில், திருமணத்தின் கூறுபடாத் தன்மை குறித்து மேய்ப்புப்பணி சுற்றறிக்கை ஒன்றை
வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
மணமுறிவுகளை இயேசு கிறிஸ்து என்றுமே ஆதரித்ததில்லை
எனக்கூறும் மால்ட்டா ஆயர்களின் அறிக்கை, மனங்கள் கடினமாகிப் போனதாலேயே மணமுறிவுகளுக்கான
எண்ணங்கள் பிறக்கின்றன எனவும் உரைக்கிறது.
இன்றைய உலகில், நம் போக்குகளில் மாற்றங்கள்
தேவையே ஒழிய, கூறுபடாத் தன்மையுடைய திருமணத்தில் மாற்றங்கள் தேவையில்லை எனவும் கூறுகிறது
ஆயர்களின் மேய்ப்புப்பணி சுற்றறிக்கை.
கத்தோலிக்க நாடான மால்ட்டா, ஐரோப்பிய ஐக்கிய
அவையில் இணைந்ததைத் தொடர்ந்து மணமுறிவுகளை அனுமதிக்கும் சட்டம் உருவாக்கப்படவேண்டும்
என்ற முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.