2010-10-19 16:29:31

பாகிஸ்தானில் அரசின் வெள்ள நிவாரண உதவிகள் கிறிஸ்தவர்களுக்கு மறுப்பு


அக். 19, 2010. பாகிஸ்தானில் ஜூலை மாத இறுதியில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டோருள் இஸ்லாமியர்களுக்கே அரசின் உதவிகள் வழங்கப்படுவதாகவும், கிறிஸ்தவர்கள் ஓரங்கட்டப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது பாகிஸ்தான் தலத்திருச்சபை.

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு அரசு உதவிகள் மறுக்கப்படுகின்றன என உரைத்த பெஷாவார் மறைமாவட்டத்தின் நிவாரண திட்ட அதிகாரி ஆஷீர் டீன், பாகிஸ்தானின் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பின் உதவிகள் மட்டுமே அவர்களுக்குக் கிடைத்து வருவதாகவும் தெரிவித்தார்.

மதம் இனம் என்ற எவ்வித பாகுபாடும் இன்றி பாகிஸ்தானின் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு இதுவரை அந்நாட்டின் 25,710 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. இதில் 1678 குடும்பங்களே சிறுபான்மை மத சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.







All the contents on this site are copyrighted ©.