2010-10-19 16:26:38

ஏழைகளிடையே தலத்திருச்சபையின் பணிகளைத் தொடர்வதற்கு கிறிஸ்தவர்களின் சாட்சிய வாழ்வு தேவை - வட இந்தியக் கிறிஸ்தவர்கள்


அக். 19, 2010. வட இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் இடம்பெறுகின்ற போதிலும், ஏழைகளிடையேயான தலத்திருச்சபையின் பணிகளைத் தொடர்வதற்கு கிறிஸ்தவர்களின் ஒன்றிணைந்த சாட்சிய வாழ்வு தேவை என்பதை அண்மை ஆய்வின் போது தெரிவித்துள்ளனர் அப்பகுதிக் கிறிஸ்தவர்கள்.

இந்த ஆய்வுக்கு ஏற்பாடு செய்த சிம்லா சண்டிகார் ஆயர் இக்னேஷியஸ் மஸ்கரினாஸ் உரைக்கையில், கிறிஸ்துவின் அன்பை அனைவருக்கும் எடுத்துச் செல்லும் பணியானது அச்சமின்றி செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், இது பள்ளிகள், போதனைகள் மற்றும் பணிகள் மூலம் இடம்பெறவேண்டும் எனவும் கூறினார்.

வட இந்தியாவில் கிறிஸ்தவ சாட்சிய வாழ்வுக்கு முதன்மை முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் எனக்கூறும் இவ்வாய்வு முடிவுகள், கத்தோலிக்கப் பள்ளிகளில் ஏழைச்சிறார்களுக்கு அதிக கல்வி வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் என்பதை இரண்டாம் முக்கியத்துவமாகவும், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டியதை மூன்றாவது முக்கியத்துவம் நிறைந்ததாகவும் தெரிவித்துள்ளன.

பெண்களின் உரிமைகள், நல ஆதரவுத்திட்டங்கள் ஆகியவைகள் குறித்தும் ஆய்வில் கலந்து கொண்ட வட இந்தியக் கிறிஸ்தவர்கள் தங்கள் ஆதரவு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.