இந்தியாவில் பாகுபாடுகளை எதிர்நோக்கும் தலித் கிறிஸ்தவர்களுக்கு உதவ ஒபாமாவுக்கு வேண்டுகோள்
அக்.16,2010. இந்தியாவில் தலித் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கும் பாகுபாடுகள் அகற்றப்படுவதற்கு
அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர் பராக் ஒபாமா உதவுமாறு அனைத்திந்திய கிறிஸ்தவர்கள்
அவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா, வருகிற நவம்பர் 5 முதல்
8 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதை முன்னிட்டு அனைத்திந்திய கிறிஸ்தவர்கள்
அவை அவருக்கு வெளியிட்டுள்ள திறந்த கடிதத்தில் இவ்வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளதாக
அவ்வவைத் தலைவர் ஜான் தயாள் கூறினார்.
அமெரிக்க அதிபர் இந்தியப் பயணத்தின் போது
மகாத்மா காந்தி நினைவிடம் செல்வார். இன்னும், அம்பேத்காருக்கும் மரியாதை செலுத்துவார்
என்று சொல்லப்பட்டுள்ளது.