தென் கொரியாவில் நான்கு நதிகளை இணைக்க அரசு எடுக்கும் முயற்சிகளைக் கைவிடுவதற்கு செபமாலை
மூலம் வேண்டும்படி குருக்கள் வேண்டுகோள்
அக்.14,2010. செபமாலை அன்னைக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த அக்டோபர் மாதத்தில் தென்
கொரியாவில் நான்கு நதிகளை இணைக்க அரசு எடுக்கும் முயற்சிகளைக் கைவிடுவதற்கு மக்கள் செபமாலை
மூலம் வேண்டும்படி கொரியாவின் குருக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அண்மையில்
கொரிய அரசுத் தலைவர் மாளிகைக்கு முன் பல்சமயத் தலைவர்களும் மக்களும் மேற்கொண்ட ஒரு நாள்
உண்ணாநோன்பு, செபங்களைத் தொடர்ந்து, மக்கள் இன்னும் செபமுயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று
இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
(Uijeongbu) உய்ஜாங்க்பு மறைமாவட்டத்தின்
குருக்கள் இணைந்து அண்மையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், இத்திட்டத்தினால் ஏற்படும்
சுற்றுச்சூழல் பாதிப்புக்களையும், பல மக்களின் வாழ்வு ஆதாரங்கள் பாதிக்கப்படுவதையும்
சுட்டிக் காட்டியுள்ளனர்.