அக்.13,2010 புதுடில்லியில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளின் நிறைவு விழாவில்
கலந்துகொள்ள இலங்கை அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சேக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதற்குத்
தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சித்
தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய அரசின் அழைப்பு தமிழக மக்களின் வெந்த உள்ளங்களில்
வேலைப் பாய்ச்சுவதாகும் எனக்கூறியுள்ளனர்.இதற்கிடையே, மஹிந்த ராஜபக்சாவின் இரண்டாவது
ஆட்சிக்காலம் வரும் நவம்பர் மாதம் 19ம் தேதி ஆரம்பமாகும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
கொழும்புவில் அரசுக்கு ஆதரவு அளிக்கும் தொழிற்சங்கத் தலைவர்களை இச்செவ்வாயன்று சந்தித்த
போது ராஜபக்ச இத்தகவலை வெளியிட்டார்.