உலகப் பசிப் பிரச்சனையை அகற்றுவது குறித்த ஐ.நா. உயர்மட்ட அளவிலான கூட்டம்
அக்.12,2010. அண்மையில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதை முன்னிட்டு, உலகப்
பசிப் பிரச்சனையை அகற்றுவது குறித்த ஐ.நா. உயர்மட்ட அளவிலான கூட்டத்தை ஐ.நா.வின் உணவு
மற்றும் வேளாண்மை நிறுவனம் உரோமையில் நடத்தி வருகிறது.
நில உடைமையுரிமை, வேளாண்மையில்
சர்வதேச முதலீடு, நெருக்கடிகளில் உணவுப் பாதுகாப்பு ஆகிய விவகாரங்கள் இக்கூட்டத்தில்
விவாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்தக் கூட்டத்தில், அரசு சாரா நிறுவனங்கள், பொது
அமைப்புகள், தனியார் அமைப்புகள், உலக வங்கி, ஐ.நா.நிறுவனங்கள் என உணவு சேமிப்போடு தொடர்புடைய
பல முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்