பிரிட்டனில் முத்திபேறு பெற்றவராக உயர்த்தப்பட்ட கர்தினால் நியூமன் பற்றிய கண்காட்சி
அக்.11,2010. கடந்த மாதம் பிரிட்டனில் முத்திபேறு பெற்றவராக உயர்த்தப்பட்ட கர்தினால்
நியூமன் பற்றிய ஒரு கண்காட்சி இஞ்ஞாயிறன்று திறக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு சனவரி
6 வரை திறந்து வைக்கப்படவிருக்கும் இந்தக் கண்காட்சியில் கர்தினால் பயன்படுத்திய உடைகளும்,
அவரது கோலும் இன்னும் பிற பொருட்களும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கர்தினால்
நியூமன் தன் வாழ்வின் 45 ஆண்டுகள் வாழ்ந்த பர்மிங்காம் பகுதியில் திரட்டப்பட்ட பல நினைவுப்
பொருட்கள் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.
இக்கண்காட்சி பிரிட்டன் மக்களுக்கும்
மட்டுமல்லாமல், வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிலும் கர்தினால் நியூமன் பெயரில் கத்தோலிக்க இலக்கியக் கழகங்கள் இயங்கி வருவது
குறிப்பிடத் தக்கது.