2010-10-07 16:11:30

மத்திய கிழக்குப் பகுதிகளுக்கான சிறப்பு ஆயர் மாமன்றத்தையொட்டி, வத்திக்கான் வெளியிடும் புதிய அஞ்சல் தலை


அக்.07,2010 இம்மாதம் 10 முதல் 24ம் தேதி வரை வத்திக்கானில் நடைபெறவிருக்கும் மத்திய கிழக்குப் பகுதிகளுக்கான சிறப்பு ஆயர் மாமன்றத்தையொட்டி, புதிய அஞ்சல் தலையொன்றை வத்திக்கான் அஞ்சல் துறை வெளியிடவுள்ளது.
இந்த அஞ்சல் தலையில் விவிலியம், திருப்பலியில் பயன்படுத்தப்படும் கிண்ணம், மற்றும் மத்திய கிழக்குப் பகுதியின் வரைபடம் ஆகியன இடம்பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த மாமன்றத்திற்கான அஞ்சல் தலையல்லாமல், இம்மாதம் 29, 30 தேதிகளில் ரோமையிலும், நவம்பர் 4 முதல் 7ம் தேதி வரை பாரிசிலும் நடைபெறும் அஞ்சல்தலை சேகரிக்கும் ஆர்வலர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சிகளையோட்டியும் வத்திக்கான் அஞ்சல் துறை அஞ்சல் தலைகளை வெளியிடத் தீர்மானித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.