2010-10-04 16:18:53

சரணடைந்த புலிகளுக்குத் தொழிற் பயிற்சிகள்


அக்.04, 2010 இலங்கையில் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ள முன்னாள் விடுதலைப் புலிகளின் மறுவாழ்வுக்காகப் பல்வேறு தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.



எனினும் ஏற்கனவே கல்வி கற்று, விடுதலைப் புலிகள் அமைப்பில் வெவ்வேறு துறைகளில் பணியாற்றி வந்தவர்கள் தங்களுக்கு அந்தந்தத் துறைகளில் தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு அரசாங்கம் வழி செய்ய வேண்டும் என அண்மையில் விடுதலை பெற்றுள்ளவர்களில் சிலர் விருப்பம் தெரிவித்திருக்கின்றார்கள்.



விடுதலைப் புலிகளின் அமைப்பின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியவர்கள் மற்றும், காயமடைந்து உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரில் சிலரும் அண்மையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.



அத்துடன், தொழில் பயிற்சியளிக்க முடியாத அளவு காயமடைந்து உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்காலத்திற்கு அரசாங்கம் உறுதியான திட்டங்களின் மூலம் வழிசெய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் விடுதலையாகியுள்ளவர்கள் மத்தியில் காணப்படுகின்றது.








All the contents on this site are copyrighted ©.