2010-10-02 14:40:55

காமன்வெல்த் விளையாட்டின் வெற்றிக்காக இந்திய இளையோர் பிரார்த்தனை


அக்.02,2010. புதுடெல்லியில் இஞ்ஞாயிறன்று தொடங்கும் 19வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் குறித்து எதிர்மறை விளம்பரங்கள் கொடுக்கப்பட்ட சூழலில் பல கிறிஸ்தவச் சபைகளைச் சேர்ந்த இந்திய இளையோர் இதன் வெற்றிக்காகச் செப வழிபாட்டை நடத்தியுள்ளனர்.

இந்த விளையாட்டுகள் குறித்தும் இதில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்களின் நல்லுணர்வுகளைத் தட்டி எழுப்பும் விதமாகவும் டெல்லி கிறிஸ்தவ இளையோர் கழகம் இவ்வெள்ளியன்று நடத்திய பிரார்த்தனையில் சுமார் ஐம்பது பேர் கலந்து கொண்டனர்.

இந்த அக்டோபர் 3 முதல் 14 வரை புதுடெல்லியில் நடைபெறும் 2010-19வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் குறித்து கடந்த சில மாதங்களாக முரண்பாடான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த விளையாட்டு நிகழ்வு இந்தியாவின் பெருமையை எடுத்துரைக்கும் தருணமாக அமைகின்றது என்று தேசிய இளையோர் செயல்பாட்டுக் கழக ஒருங்கிணைப்பாளர் Rakesh Singh கூறினார்.








All the contents on this site are copyrighted ©.