2010-10-02 14:37:36

கருவில் வளரும் குழந்தைகளுக்கானத் திருத்தந்தையின் செபத்தில் விசுவாசிகளை ஈடுபடுத்த உலக ஆயர்களுக்கு அழைப்பு


அக்.02,2010. கத்தோலிக்கத் திருச்சபை மனித வாழ்வின் மீது கொண்டிருக்கும் அன்பையும் மதிப்பையும் வெளிப்படுத்தும் நோக்கத்தில் கருவில் வளரும் குழந்தைகளுக்கெனத் திருத்தந்தை நடத்தவிருக்கும் செபவழிபாட்டில் எல்லா விசுவாசிகளையும் ஈடுபடுத்துமாறு உலகின் ஆயர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு திருவருகைக் காலம் தொடங்குவதைக் குறிக்கும் விதமாக நவம்பர் 27ம் தேதி மாலை தூய பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருத்தந்தை திருப்புகழ்மாலை நிகழ்த்துவார்.

இவ்வாண்டின் இச்செபத்தில் கருவில் வளரும் குழந்தையின் வாழ்வுக்காகவும் செபிக்கப்படும்.

திருவழிபாடு மற்றும் அருளடையாளப் பேராயத் தலைவர் கர்தினால் Antonio Cañizares Llovera ம், திருப்பீடக் குடும்ப அவைத் தலைவர் கர்தினால் Ennio Antonelli யும் இணைந்து உலகின் எல்லா ஆயர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், இதே நாளில் இதே கருத்துக்காக இதே மாதிரியான செப வழிபாட்டை எல்லாப் பங்குகளிலும் நடத்துமாறு கேட்கப்பட்டுள்ளது.

இம்முயற்சி குறித்து கருத்து தெரிவித்தத் திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை லொம்பார்தி, மனித வாழ்வு மற்றும் அதன் மீதான அன்புக் கலாச்சாரத்திற்கானத் திருச்சபையின் அர்ப்பணத்திற்குச் சான்று பகர்வதாக இது இருக்கும் என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.