2010-10-01 16:01:50

துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்க்கெதிராகப் போராட ஐரோப்பிய சமுதாய அவை அழைப்பு


அக்.01,2010. துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு ஐரோப்பிய சமுதாய அவை உழைக்குமாறு ஐரோப்பிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் சமுதாய அவைப் பணிக்குழு (COMECE) வலியுறுத்தியுள்ளது.

உலகில் இடம் பெறும் இறப்புகளில் 75 விழுக்காடு கிறிஸ்தவ விசுவாசத்தோடு தொடர்புடையவை என்றுரைக்கும் அப்பணிக்குழு, ஆண்டுதோறும் ஒரு இலட்சத்து எழுபதாயிரம் கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்திற்காகத் துன்புறுகின்றனர் என்று கூறியது.

உலகில் ஏற்கனவே சுமார் பத்து கோடிப்பேர் மதத்தின் பெயரால் பாகுபாடுகளை எதிர்நோக்குகின்றனர், இவர்களில் பெரும்பான்மையினர் கிறிஸ்தவர்கள் என்றும் அக்குழு கூறியது.







All the contents on this site are copyrighted ©.