2010-09-30 16:40:41

அக்டோபர் 01 நாளும் ஒரு நல்லெண்ணம்


ஒரு சமயம் ஒரு சென் குருவிடம், உங்கள் வாழ்க்கையின், உங்கள் தியானயோக நிலையின் இரகசியம் என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், நான் ஒவ்வொரு நாள் காலையிலும் தூங்கி எழும்பும்போது இன்று என் வாழ்க்கையின் இறுதி நாள் என்ற உணர்வோடு எழும்புகிறேன் என்று சொன்னார். இது ஒவ்வொருவருக்குமே தெரியாததா என்ன? என்று மீண்டும் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், அவர்களுக்கு அது தெரியும், ஆனால் நான் அதனை உணர்கிறேன் என்றார்.

இன்றைய நாள் உன் வாழ்க்கையின் இறுதி நாள் என்றால் அதனை எப்படி வாழ நீ விரும்புவாய்?

நீ விழிப்பாயில்லையெனில் தீய சக்தி உன்னை விழுங்கி விடும்








All the contents on this site are copyrighted ©.