2010-09-30 16:25:39

அக்டோபர் 01, உலக முதியோர் தினம்- பான் கி மூனின் செய்தி


செப்.30,2010. முதியோர், வெறுமனே வாழ்வதற்கு உதவி செய்யப்படுவதையும் கடந்து, அவர்கள் உண்மையிலேயே வாழ்க்கையை வாழ்வதற்கான சேவைகள் வழங்கப்படுமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டார்.

இவ்வெள்ளிக்கிழமை இருபதாவது உலக முதியோர் தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு செய்தி வெளியிட்ட மூன், உலகில் வேகமாக அதிகரித்து வரும் முதியோரின் எண்ணிக்கை, கடந்த முப்பது ஆண்டுகளில் இரண்டு மடங்காகியுள்ளது என்றார்.
2050ம் ஆண்டில் உலக முதியோர் எண்ணிக்கை இருநூறு கோடியாக உயரும் எனவும் பணித்தளங்களில் வயது மற்றும் பாலினப் பாகுபாடுகளைக் களைவதற்குச் சட்டங்களும் கொள்கைகளும் உருவாக்கப்பட வேண்டுமெனவும் கேட்டுள்ளார் பான் கி மூன். 2015க்குள் மில்லேன்ய வளர்ச்சித் திட்ட இலக்குகள் நிறைவேற்றப்பட வேண்டிய நிலையில் இலட்சக்கணக்கான முதியோர் எதிர்நோக்கும் வறுமை ஒழிக்கப்படுவதற்கும் அவர்கள் மாண்புடன் வாழவும் நாடுகள் ஆவன செய்யுமாறும் அவர் கேட்டுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.