திருத்தந்தையின் பிரிட்டன் திருப்பயணம் மிகப்பெரும் வெற்றி - பிரபு கிறிஸ் பேட்டன்
செப்.28,2010. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இம்மாதம் 16 முதல் 19 வரை பிரிட்டனில் மேற்கொண்ட
திருப்பயணம் மிகப்பெரும் வெற்றி வாகை சூடியதாக இருந்ததாக அரசு சார்பில் பயண ஏற்பாடுகளைக்
கவனித்த பிரபு கிறிஸ் பேட்டன் கூறியுள்ளார்.
திருத்தந்தையின் திருப்பயணம் மிகப்பெரிய
அளவில் வெற்றிப் பெற்றுள்ளது என்பதே பொதுமக்கள் பெரும்பான்மையினோரின் கருத்து என்றார்
அவர்.
இது திருத்தந்தைக்கு மட்டுமல்ல, கத்தோலிக்கத் திருச்சபை, ஏனைய கிறிஸ்தவ
சபைகள், இங்கிலாந்தின் ஏனைய மதங்கள் மற்றும் அனைத்து சமூகங்களுக்கும் ஒரு வெற்றிப்பயணமாகவே
இருந்தது என்றார் பிரபு பேட்டன்.
சமூக வாழ்வில் மதக்குழுக்களின் இன்றியமையாத பங்கை
வலியுறுத்துவதாய் திருத்தந்தையின் பயணம் இருந்தது என்றார் திருந்த்தந்தையின் பிரிட்டனினுக்கான
பயண ஏற்பாடுகளை அரசின் சார்பில் கவனித்த பிரபு பேட்டன்.