2010-09-28 15:33:27

செப்டம்பர் 29 நாளுமொரு நல்லெண்ணம்


1970களில் (1972 முதல் 1983 வரை) உலகப் புகழ்பெற்றிருந்த ABBA என்ற ஸ்வீடன் நாட்டு இசைக் குழுவினர் எழுதிய பல புகழ்பெற்ற பாடல்களில் பலரது மனங்களையும் கவர்ந்த ஒரு பாடல் "வானத்தூதரை நான் நம்புகிறேன்." (I Believe in Angles). அப்பாடலில் கூறப்பட்டுள்ள எண்ணங்கள் இவை:
கனவும், கவிதையும் கைவசம் உள்ளன,
கடினமான வாழ்வை எளிதாக்க...
கற்பனைக் கதைகளில் அற்புதம் காணும்
வித்தைகள் என்னிடம் உள்ளதால்
வாழ்வு தொலைந்து போனது போல் நான் உணரும்போதும்
எதிர்காலத்தை மீண்டும் பற்றிக் கொள்ள முடிகிறது.
எனக்கு நானே வகுத்த இலக்கு உயர்ந்ததாய் தெரிவதால்
இப்போது இருள் என்னை சூழ்ந்தாலும்,
முன்னேறிச் செல்லும் முயற்சி கூடுகிறது.
வானத்தூதரை நம்புகிறேன்.
வாழ்வு நதியில் நீந்துகிறேன்.
காணும் அனைத்திலும் நன்மை ஒன்றையேக் காண்கிறேன்.செப்டெம்பர் 29 - தலைமை விண்ணகத் தூதர்களான புனித மிக்கேல், கபிரியேல், இரஃபேல் ஆகியோரின் திருநாள். எனவே இவ்வெண்ணங்கள்.







All the contents on this site are copyrighted ©.