‘மனிதராய் இருக்க சில விதிமுறைகள்’ என்று Dr. Cherie Carter-Scott
என்பவர் எழுதி வைத்துள்ள எண்ணங்களில் ஒரு சில:
வாழ்வு எனும் பள்ளியில் பாடங்கள்
பயில உனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் தவறுகள் என்பது கிடையாது.
எல்லாமே பாடங்களே. வெற்றி, தோல்வி என்ற நடைமுறைப் பயிற்சிகள் வழியே, வளர்ச்சி என்ற
பாடம் சொல்லித்தரப்படும். ஒவ்வொரு பாடத்தையும் நீ பயின்று தேர்ச்சி பெறும் வரை அந்தப்
பாடம் மட்டுமே உனக்குத் தரப்படும். அந்தப் பாடத்தில் தேர்ச்சி பெற்ற பின்னரே, அடுத்தப்
பாடம் தரப்படும். இந்தப் பள்ளியில் சொல்லித் தரப்படும் பாடங்களுக்கு முடிவே கிடையாது.வாழ்வு
முழுவதும் தொடரும்.