கேரளாவில் விவிலிய வினாவிடைப் போட்டியில் சுமார் ஐந்து இலட்சம் கத்தோலிக்கர்
செப்.25,2010. கேரள மாநிலம் முழுவதும் சுமார் ஐந்து இலட்சம் கத்தோலிக்கர் இஞ்ஞாயிறன்று
விவிலிய வினாவிடைப் போட்டியில் கலந்து கொள்கின்றனர். இந்தியாவி்ல் அதிகமான கத்தோலிக்கரைக்
கொண்டுள்ள கேரளாவில் இந்த விவிலியப் போட்டியில் 3200 பங்குகளைச் சேர்ந்த பலதரப்பட்ட வயதினர்
பங்கு கொள்கின்றனர்.பத்து வயதுக்கு உட்பட்டவர்கள் முதல் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள்
வரை 4,83,170 கத்தோலிக்கர் இஞ்ஞாயிறன்று இடம் பெறும் போட்டியில் கலந்து கொள்கின்றனர்.