2010-09-24 15:41:22

செப்டம்பர் 27 வத்திக்கான் அருங்காட்சியகத்திற்கு நுழைவு இலவசம்


செப்.24,2010. 31வது உலக சுற்றுலா தினம் கடைபிடிக்கப்படும் வருகிற திங்கட்கிழமையன்று வத்திக்கான் அருங்காட்சியகத்திற்குப் பார்வையாளர்கள் கட்டணம் எதுவுமின்றி அனுமதிக்கப்படுவார்கள் என்று திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் பயணிகளுக்கான மேய்ப்புப்பணி அவை அறிவித்துள்ளது.

உலக சுற்றுலா நிறுவனம், “சுற்றுலாவும் பல்வகை உயிரினமும்” என்ற தலைப்பில் இவ்வுலக தினத்தைக் கடைபிடிக்கின்றது என்று தனது செய்தியில் கோடிட்டுக் காட்டியுள்ள இத்திருப்பீட அவை, இயற்கை மற்றும் வரலாற்று-கலாச்சாரப் பாரம்பரியச் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் சுற்றுலாப் பயணிகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

இந்த உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வருகிற திங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை வத்திக்கான் அருங்காட்சியகத்தை நுழைவு சீட்டு இன்றி பார்க்கலாம் என்றும் மாலை நான்கு மணி வரை அங்கு உள்ளே செலவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது







All the contents on this site are copyrighted ©.