கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஏழைகளையும் ஒரு பகுதியாக இணைக்க வேண்டி மணிலா உயர்மறைமாவட்டம்
அழைப்பு
செப். 20, 2010. வருகிற கிறிஸ்மஸ் காலத்திற்கான கொண்டாட்டங்களில் ஏழைகளையும் ஒரு பகுதியாக
இணைக்க வேண்டி பிலிப்பின்ஸில் மணிலா உயர்மறைமாவட்டம் அழைப்பு விடுத்துள்ளது.
Segunda
Mana என்ற பெயருடன் மணிலாவில் பிலிப்பின்ஸ் காரித்தாஸ் அமைப்பு ஆரம்பித்துள்ள கடைகளில்
கிறிஸ்மஸ் பொருட்களை வாங்கும் போது, பிற கடைகளை விட விலை குறைவாக வாங்குவதோடு, அக்கடைகளில்
சேரும் வியாபாரத் தொகையில் ஒரு பகுதி ஏழைகளைச் சென்றடையும் என்று மணிலா காரித்தாஸ் அமைப்பின்
இயக்குனர் அருள்திரு அன்டன் பாஸ்குவால் கூறினார்.
Segunda Mana என்ற பெயர் தாங்கிய
மூன்றாவது கடையை இந்த ஞாயிறன்று திறந்து வைத்துப் பேசிய அருள்தந்தை பாஸ்குவால் இவ்வாறு
கூறினார்.
பிலிப்பின்ஸ் மக்கள் கிறிஸ்மஸுக்காகப் பொருட்கள் வாங்குவதை செப்டம்பர்
மாதமே ஆரம்பித்துவிடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.