புனித மரியா பல்கலை கழகத்தின் ஆசிரியர்களுக்கு திருத்தந்தையின் உரை
தகவல்களைப் பரிமாறுவது, செயல் திறமைகளை வளர்ப்பது, இவைகள் மூலம் சமுதாயத்தின் பொருளாதாரத்தை
முன்னேற்றுவது என இவைகள் மட்டுமே ஓர் ஆசிரியரின் பணிகள் அல்ல. கல்வி என்பது முழு மனிதர்களை
உருவாக்குவது. உங்கள் மாணவ மாணவியரை முழு ஞானத்தில் வளர்ப்பது உங்கள் தலையாயக் கடமை. இன்றைய உலகில்
பல துறவு சபைகளின் முக்கிய பணி கல்வி புகட்டுவதாய் உள்ளது. இத்தருணத்தில், நான் சிறுவனாய்
இருந்த போது, எனக்குக் கல்வி புகட்டிய "ஆங்கில மகளிர்" (English Ladies) என்ற குழுவினருக்கு
என் நன்றியைக் கூறுகிறேன் என்று கூறிய திருத்தந்தை, அங்கு கூடியிருந்த ஆசிரியர்களுடன்
தன் இறுதி அறிவுரையைப் பகிர்ந்தார்.நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சிறுவர் சிருமியருக்குப்
பாதுகாப்பான சூழலை நமது பள்ளிகள் உருவாக்க வேண்டும் என்ற சிறப்பு வேண்டுகோளை முன்வைத்த
திருத்தந்தை, புனித மரியா பல்கலை கழகத்தின் பொறுப்பாளரான ஆயர் Stack இடம் கன்னி மரியாவின்
உருவம் தாங்கிய ஒரு நினைவுப் பரிசை வழங்கினார்.