2010-09-17 16:41:55

இலங்கையில் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே ஒப்புரவை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது அந்நாட்டு காரித்தாஸ் அமைப்பு.


செப். 17, 2010. இலங்கையில் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே ஒப்புரவை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக அறிவிக்கிறது அந்நாட்டு காரித்தாஸ் அமைப்பு.

காட்டன்குடியின் மன்பா உல் ஹைரத் மசூதியில் இஸ்லாமியக் குடும்பங்களுக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கும் இடையே விருந்துக்கென ஏற்பாடுச் செய்த இலங்கை காரித்தாஸ் அமைப்பு, நட்புணர்வைப் புதுப்பிக்கும் நடவடிக்கையாக இதனை மேற்கொண்டதாக அறிவித்தது.

நாட்டில் பல்வேறு இனங்களிடையே அமைதியை உருவாக்கவேண்டும் என்ற நோக்கில் அமைதி மற்றும் ஒப்புரவுத் திட்டங்களை வகுத்து, செயல்படுத்தி வருகின்றது இலங்கை காரித்தாஸ் அமைப்பு.








All the contents on this site are copyrighted ©.