2010-09-15 15:12:09

திருத்தந்தையின் இங்கிலாந்துக்கானத் திருப்பயணத்தையொட்டி வத்திக்கான் வெளியிடும் தபால் தலை


செப்டம்பர் 15, 2010 திருத்தந்தையின் இங்கிலாந்துக்கானத் திருப்பயணத்தையொட்டி, வத்திக்கான் தபால் துறை ஒரு தபால் தலை வெளியிட்டுள்ளது.
இவ்வியாழன் முதல் வருகிற ஞாயிறு வரை திருத்தந்தை மேற்கொள்ளும் இந்தத் திருப்பயணத்தின் நினைவாக, வத்திக்கான் வெளியிட்டுள்ள இந்தத் தபால் தலையில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டின் உருவமும், அவரால் முத்திபெருபெற்றவராய் அறிவிக்கப்பட விருக்கும் கர்தினால் நியூமன் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன.முத்திபேறு பெற்றவராய் கர்தினால் நியூமன் உயர்த்தப்படும் நிகழ்வையொட்டி, வேறொரு தபால் தலையும் வெளியிடப்படும் என்று வத்திக்கான் தபால் துறை அறிவித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.