1616 – ஐரோப்பாவில் பிரபுக் குடும்பங்களைச் சாராத மக்களுக்கென்று முதல் முறையாக இத்தாலியில்
Frascati என்ற இடத்தில் பொதுப்பள்ளி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. 1821 - ஸ்பெயினிடமிருந்து
கொஸ்டா ரிக்கா, எல் சல்வடோர், குவாத்தமாலா, ஹொண்டுராஸ், நிக்கராகுவா ஆகியன கூட்டாக விடுதலையை
அறிவித்தன. 1835 – சார்ல்ஸ் டார்வின் உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுகளை
மேற்கொண்டார். 1909 - திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை ஆரம்பித்தவரும், தமிழ்நாட்டின்
முன்னாள் முதலமைச்சருமான சி. என். அண்ணாதுரை பிறந்தார். 1935 - ஜெர்மனியில் யூதர்களுக்கு
குடியுரிமை சட்டபூர்வமாக மறுக்கப்பட்டது. 1981 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
உருவாக்கப்பட்டது. செப்டம்பர் 15 -வியாகுல அன்னையின் திருநாள்.